• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற Cross Harbor Race நீச்சல் போட்டி

November 1, 2017 தண்டோரா குழு

ஹாங்காங் நகரின் விக்டோரியா துறைமுகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த Cross HarborRace நீச்சல் போட்டியில், சுமார் 2,943 பேர் கலந்துக்கொண்டனர்.

சீனா நாட்டின் ஹாங்காங் நகரிலுள்ள விக்டோரியா துறைமுகத்தில்நடந்த “Cross Harbor Race” நீச்சல் போட்டி நேற்று(அக்டோபர் 31) நடைபெற்றது. அந்த போட்டியில் சுமார் 2,943பேர் கலந்துக்கொண்டனர்.

இந்த நீச்சல் போட்டியின் ஒரு பகுதியான, 17 வயது முதல் 34 வயதுள்ள ஆண்களுக்கான நீச்சல் போட்டி, நேற்று(அக்டோபர் 31) காலை நடைப்பெற்றது.இப்போட்டியில், கீத் சின் சின்-டிங் 11 நிமிடங்களில் நீந்தி வெற்றி பெற்றார். அதேபோல் பெண்களுக்கான போட்டியில், நிகிதா லா பாக்-டங், 11 நிமிடங்கள் 45.6 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார்.

கடந்த 1906ம் ஆண்டு “Cross Harbor Race” முதன்முதலில் நடைபெற்றது. ஆனால் விக்டோரியா துறைமுகத்தில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக 1978 முதல் 2010ம் ம் ஆண்டு வரையிலான சுமார் 33 ஆண்டுகள் இந்த போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த 2௦11ம் ஆண்டு முதல் இந்த “Cross Harbor Race” மீண்டும் தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டி நடைபெற்றதால் அங்கு ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க