• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்ற Cross Harbor Race நீச்சல் போட்டி

November 1, 2017 தண்டோரா குழு

ஹாங்காங் நகரின் விக்டோரியா துறைமுகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த Cross HarborRace நீச்சல் போட்டியில், சுமார் 2,943 பேர் கலந்துக்கொண்டனர்.

சீனா நாட்டின் ஹாங்காங் நகரிலுள்ள விக்டோரியா துறைமுகத்தில்நடந்த “Cross Harbor Race” நீச்சல் போட்டி நேற்று(அக்டோபர் 31) நடைபெற்றது. அந்த போட்டியில் சுமார் 2,943பேர் கலந்துக்கொண்டனர்.

இந்த நீச்சல் போட்டியின் ஒரு பகுதியான, 17 வயது முதல் 34 வயதுள்ள ஆண்களுக்கான நீச்சல் போட்டி, நேற்று(அக்டோபர் 31) காலை நடைப்பெற்றது.இப்போட்டியில், கீத் சின் சின்-டிங் 11 நிமிடங்களில் நீந்தி வெற்றி பெற்றார். அதேபோல் பெண்களுக்கான போட்டியில், நிகிதா லா பாக்-டங், 11 நிமிடங்கள் 45.6 விநாடிகளில் நீந்தி வெற்றி பெற்றார்.

கடந்த 1906ம் ஆண்டு “Cross Harbor Race” முதன்முதலில் நடைபெற்றது. ஆனால் விக்டோரியா துறைமுகத்தில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக 1978 முதல் 2010ம் ம் ஆண்டு வரையிலான சுமார் 33 ஆண்டுகள் இந்த போட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கடந்த 2௦11ம் ஆண்டு முதல் இந்த “Cross Harbor Race” மீண்டும் தொடங்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டி நடைபெற்றதால் அங்கு ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க