• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது

November 1, 2017 தண்டோரா குழு

கோவை நகர் புறங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த நவாஷ் என்பவரை கோவை அன்னூர் போலீஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கோவிலில் உள்ள வேல் திருட்டு போனதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது, இதை அடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் சந்தேகத்தின் பேரில் நவாஷ் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜா என்ற இருவரை அன்னூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடம் சோதனையிட்ட போது வேல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது, இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும், அதில் நவாஷ் மீது கோவை நகர் புறங்களில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது,

இதனைத்தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க