• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி மாநிலத்தில் விடுதலை நாள் இன்று கொண்டாடப்படுகிறது

November 1, 2017 தண்டோரா குழு

புதுச்சேரி மாநிலத்தில் இன்று விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பிறகு 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரஞ்சுக்காரர்களிடமிருந்து புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்தது.இந்த நாளை புதுச்சேரி விடுதலை நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

புதுச்சேரியின் விடுதலை நாளான இன்று கடற்கரை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

கொடியேற்ற நிகழ்சிக்கு பின்னர் பேசிய முதலமைச்சர் நாரயணசாமி,

புதுச்சேரி நகரம் தனது பாரம்பரியத்தையும், பழமை வாய்ந்த புராதான வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும் ரூ.107 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ழந்தை இறப்பு விகிதத்தை குறைத்ததில் நாட்டிலே புதுச்சேரி மாநிலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது எனவும் ,டெங்கு காய்ச்சல் பரவுதை தடுக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதகாவும் கூறினார்.

மேலும் படிக்க