• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடாக மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைவராக நீலாமணி நியமனம்

October 31, 2017 தண்டோரா குழு

கர்நாடாக மாநிலத்தின் முதல் பெண்காவல்துறை தலைவராக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார்.

ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி, கர்நாடாக புதிய (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&IGP)ஆக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம் கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரி என்ற பெருமையை நீலாமணி பெற்றுள்ளார். தற்போது சிஐடி பிரிவு தலைவராக பணியாற்றி வரும் நீலாமணி என்.ராஜூஜார்கண்ட் மாநிலம் ரூர்கிவை சேர்ந்தவர். இவர் 1983-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் சேர்ந்தார்.

நீலாமணி நியமனம், அம்மாநில முதலமைச்சர் சித்ராமையாவால் தேர்வு செய்யப்பட்டது என உள்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். மேலும், நீலாமணி என்.ராஜூவை தலைமை காவல்துறை அதிகாரியாக நியமித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு என்று கர்நாடாகவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் தெர்வித்துள்ளனர்.

மேலும் படிக்க