• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

7 வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு தர்ம அடி

October 31, 2017 தண்டோரா குழு

ஆம்பூர் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(50). இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,இவர் அதே பகுதியில் உள்ள வாய் பேசமுடியாத 7 வயது சிறுமிக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து பாலாற்றங்கரைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பழனிவேலுக்கு சரமாரியாக அடி உதை கொடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.பின்னர் தகவல் அறிந்த அங்கு வந்த ஆம்பூர் கிராமிய போலீசார் பொதுமக்களிடமிருந்து பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.பின்னர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமணைக்கு அழைத்துச்சென்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க