• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘டாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

October 31, 2017 தண்டோரா குழு

‘டாஸ்மாக்’ கடைகளில் அனைத்திலும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசு நடத்தும் 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் தினமும் சுமார் ரூ. 70 கோடி வரை, மது வகைகள் விற்பனையாகின்றன.தற்போது வரை இவை ரொக்க பண பரிவர்த்தனை முறையில் நடக்கின்றது.

மேலும்,‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, பணம் செலுத்தும் முறை சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நவீன டாஸ்மாக் கடைகளில் குறைவாக பயன்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தின் மூலம்,டாஸ்மாக் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்கலாம்.மேலும்,செல்லாத ரூபாய் நாடுகள் டாஸ்மாக் மூலமாக மாற்றப்படுவதை தடுக்கலாம்.மேலும்,டாஸ்மாக் வங்கி கணக்கில், உடனே பணம், டிபாசிட் ஆவதுடன், கொள்ளை, கூடுதல் விலை போன்ற, முறைகேடுகள் நடக்காது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க