• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘டாஸ்மாக்’ கடைகளில் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை

October 31, 2017 தண்டோரா குழு

‘டாஸ்மாக்’ கடைகளில் அனைத்திலும் விரைவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை, அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசு நடத்தும் 5,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளில் தினமும் சுமார் ரூ. 70 கோடி வரை, மது வகைகள் விற்பனையாகின்றன.தற்போது வரை இவை ரொக்க பண பரிவர்த்தனை முறையில் நடக்கின்றது.

மேலும்,‘டெபிட், கிரெடிட் கார்டு’ வாயிலாக, பணம் செலுத்தும் முறை சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள நவீன டாஸ்மாக் கடைகளில் குறைவாக பயன்படுத்தப்படுகின்றன.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தின் மூலம்,டாஸ்மாக் ஊழியர்கள், அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக விற்பனை செய்வதை தடுக்கலாம்.மேலும்,செல்லாத ரூபாய் நாடுகள் டாஸ்மாக் மூலமாக மாற்றப்படுவதை தடுக்கலாம்.மேலும்,டாஸ்மாக் வங்கி கணக்கில், உடனே பணம், டிபாசிட் ஆவதுடன், கொள்ளை, கூடுதல் விலை போன்ற, முறைகேடுகள் நடக்காது என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் படிக்க