• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

October 31, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 33வது நினைவு தினத்தையொட்டி,புதுதில்லியிலுள்ள அவருடைய நினைவிடத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திராகாந்தி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மகள் ஆவார். கடந்த 1917ம் ஆண்டு, நவம்பர் மாதம் 19ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி தனது பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்தை நினைவுகூரும் வகையில், மறைந்த முன்னால் பிரதமர் இந்திராகாந்திக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க