• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜனவரி முதல் மீட்டர் கட்டணம் அமலுக்கு வருகிறது

October 28, 2017 தண்டோரா குழு

ஆட்டோ மீட்டர் கட்டண நிர்ணயம் குறித்து பல கட்ட கோரிக்கை போராட்டத்தை கோவை ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நடத்தி வருகின்றனர்.இருப்பினும் முறையான கட்டணம் நிர்ணயம் செய்வதில் தமிழக அரசு சரியான முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக,திமுக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை விவாதம் செய்தனர்.

இதனையடுத்து வரும் ஜனவரி முதல் அரசு ஒத்துழைப்பு இல்லை என்றாலும் கோவையில் ஆட்டோ மீட்டர் கட்டணம் கிலோமீட்டருக்கு 30 ரூபாய் வீதமும் அடுத்த ஒரு கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் வீதம் வசூலிக்கபடும் என முடிவெடுத்து கட்டண பட்டியலை வெளியிட்டனர்.

இது குறித்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமை நிர்வாகிகள் கூறுகையில்,/strong>

கோவையில் தனியார் நிறுவனங்கள் மறைமுகமாக ஆட்டோ கட்டணம் உயர்த்தி மக்களுக்கு சிரமத்தை தருகின்றனர்.இந்நிலையில் இன்றைய கால சூழலையை மனதில் கொண்டு அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணய செய்யமால் காலதாமதம் செய்து வருகிறது. இதை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் மக்களை மறைமுகமாக சுரண்டி வருகின்றனர். இதை கண்டிக்கும் வகையில் இன்று நாங்களே ஆட்டோ கட்டணத்தை முடிவு செய்து வெளியிட்டு உள்ளோம். அரசு இதற்கு அனுமதி வழங்காவிடிலும்,ஜனவரி முதல் இந்த கட்டண படி ஆட்டோகள் ஓடும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க