• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சமூக வலைதளங்களில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள் – ரஜினி

October 28, 2017 தண்டோரா குழு

சங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் மிக பிரமாண்ட முறையில் உருவாகி வரும் படம் 2.0. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் பிரம்மாண்டமாக நேற்று துபாயில் நடந்தது.

அப்போது விழாவில் பேசுகையில்,

இந்தியாவில் இப்படி ஒரு படம் இனி வருமா என்பது கூறமுடியாது. ஆனால் ஷங்கரால் நிச்சயம் அது முடியும். நாமே 2.0 ஹாலிவுட்டை மீறிய படம் என கூறிக்கொள்வது தண்டோரா அடிப்பது போல் உள்ளது. படம் பார்த்த பிறகு அதை நீங்கள் உணர்வீர்கள்”. கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. இளைஞர்கள் வாழ்க்கையில் இன்புற வேண்டுமென்றால், நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள். படம் சுமார் என்றோ, நன்றாக இல்லை என்றோ சோசியல் மீடியாவில் விமர்சிக்காதீர்கள். விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு, திரைத்துறையை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

மேலும் படிக்க