• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதன்முறையாக களத்தில் இறங்கினார் கமல்

October 28, 2017 தண்டோரா குழு

சென்னை எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன் நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து” என்று பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், ட்விட்டரில் மட்டுமே கருத்து தெரிவித்து வந்தநிலையில், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் கூறும் வகையில் கமல் இன்று காலை எண்ணூர் துறைமுகத்திற்கே சென்று ஆய்வு செய்தார்.அதோடு சென்னை எண்ணூர் பகுதி மக்களிடம் அங்குள்ள பிரச்னைகள் குறித்தும் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

அவருடன் இணைந்து சமூக ஆர்வலர் நித்யானந்த் அவர்களும் உடன் சென்றிருந்தார்.மேலும், கொசஸ்தலை ஆற்றில் வல்லூர், வடசென்னை அனல்மின் நிலையங்கள் சாம்பல்கழிவுகளை கொட்டுவதாக கமல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க