• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆஸ்திரேலிய துணை பிரதமர் பதவி பறிப்பு

October 27, 2017 தண்டோரா குழு

இரட்டை குடியுரிமை கொண்ட ஆஸ்திரேலிய நாட்டின் துணை பிரதமர் பார்னாபை ஜோய்ஸ், தேர்தலில் போட்டியிட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்ய அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியநாட்டின் துணை பிரதமராக இருப்பவர் பார்னாபை ஜோய்ஸ். இரட்டை குடியுரிமை வைத்துள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் ஆகும்.ஆனால், நியூசிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்ற அவர்,தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக,அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், ஜோய்ஸ் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றம், அவரையும் அதேபோல், இரட்டை குடியுரிமை கொண்ட ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கட்சியை சேர்ந்த பியோனா நாஷ், ஓன் நேஷன் கட்சியை சேர்ந்த மால்காம் ராபர்ட்ஸ்ஆகியோரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவின் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த லரிசா வாட்டர்ஸ், ஸ்காட் லுட்லாம் ஆகியோர் தங்கள் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால், தற்போது அந்நாட்டின் அரசியலில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க