• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாஜ்மஹாலுக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டு தம்பதியினர் மீது தாக்குதல்!

October 26, 2017 தண்டோரா குழு

தாஜ்மஹாலுக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு தம்பதியினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசியங்களுள் ஒன்று.கடந்த சில நாட்களாகவே தாஜ்மஹால் குறித்த சர்ச்சை எழுந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சுவிஸிலிருந்து இந்தியாவுக்கு வந்த இரு தம்பதியினர் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த சிலர் ஃபதேபூர் சிக்ரியில் வைத்து அவர்களை தாக்கியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதல் கடுமையாகவே உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து உத்திர பிரதேச அரசிடம் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க