• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்கா அனுப்பிய தீவிரவாதிகள் பட்டியலில் ஹபீஸ் சயீத் பெயர் இல்லை – பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர்

October 26, 2017 தண்டோரா குழு

அமெரிக்கா அனுப்பிய 75 தீவிரவாதிகள் பட்டியலில் ஹபீஸ் சயீத் பெயர் இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 2008ம் ஆண்டு, மும்பை நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உட்பட இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதலை, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு நடத்தியது. அதேபோல், கடந்த 2008ம் ஆண்டு, காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை நிறுவனர் மற்றும் ஜமாத்-உத்-தாவஹ் தலைவர் ஹபீஸ் சயீத் ஆவார். கடந்த ஜனவரி மாதம், பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரிலுள்ள ஜமாத்-உத்-தாவஹ் அலுவலகத்தை பாகிஸ்தான் காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையின்போது, அவரையும் அவருடைய 4 கூட்டாளிகளையும் கைது செய்து, வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்த தீவிரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் குடிமகனான ஹபீஸ் சயீத் பெயர் இருந்தது. அந்த தீவிரவாதிகள் பட்டியலை பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கா அனுப்பியது.

ஆனால், பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடந்த கூட்டத்தில், அமெரிக்கா பாகிஸ்தான் 75 தீவிரவாதிகள் பட்டியலை அனுப்பியதாகவும், அதில் ஹபீஸ் சயீத் பெயர் இல்லை.ஆப்கானிஸ்தான் தலிபானுக்கு கடந்த காலத்தில் உதவி செய்ததுபோல்,தற்போது அந்த இயக்கத்திற்கு பாகிஸ்தான் எந்த வித ஆதரவையும் அளிக்கவில்லை.வேறு யாரோ அவர்களுக்கு இப்போது நிதியுதவி அளித்து வருகிறார்கள்” என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க