• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.எச்.மருத்துவமனையில் 8 வயது சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் சிகிச்சை!

October 25, 2017 தண்டோரா குழு

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனுக்கு, சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை ரோபோட்டிக் அறுவைசிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

இந்த சிறுவனுக்கு சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப்பைக்கு செல்லும் குழாயில் பிறப்பிலேயே அடைப்பு எற்பட்டு இருந்தது.இது கிட்னியின் செயலை பாதித்துக் கொண்டிருந்தது.சிறுநீரக பைக்கு அருகில் உள்ள இந்த அடைப்பை நீக்க டாக்டர் குமரன் மற்றும் மயக்கவியல் டாக்டர் என். வினோத்குமார் இருவரும் இணைந்து ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சையில், சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பை நீக்கிய பிறகு, மீண்டும் சீறுநீர்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர் பை நிறைந்தவுடன் பின்னோக்கி செல்லாத வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுண்ணிய தையல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய தையலை மேற்கொள்ள, பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் ரோபோட்டிக் நுண்ணோக்கியால் மிகவும் துல்லியமாக இந்த அறுவைசிகிச்சையில் மேற்கொள்ளப்பட்டது.இந்த சிகிச்சையால், விரைவாக குணமடைவதுடன், துளையிட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின் நன்மைகளும் பெறப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில், குழந்தைக்கான ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சிகிச்சை குறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமிஅவர்கள் கூறுகையில்,”மிகவும் அதிநவீன டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை கருவியும்,சிறந்த மருத்துவர்களும் இம்மருத்துவமனையில் இருப்பதால், இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்ய முடிகிறது.

இத்தகைய பயனுள்ள கருவி,பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட சில அறுவைசிகிச்சைகளுக்கு மிகவும் உதவியாக உள்ளது”என்று கூறினார்.

மேலும் படிக்க