• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் 3 மாதங்களுக்கு முன் தொலைத்த ஜெர்மன் தம்பதியினரின் நாய் கண்டுபிடிப்பு

October 24, 2017 தண்டோரா குழு

ஜெர்மனைச் சேர்ந்த தம்பதிகளான ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் கடந்த ஆண்டு முதல் பிரத்யேக வாகனம் மூலம் உலகம் முழுவதும் சாலை மார்க்கமாகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணத்தில் அல்பேனியாவில் அவர்களுடன் இணைந்த நாய்க்கு லுக் பெயரிட்டு தங்கள் பயணத்தில் இணைத்துக் கொண்டனர். இதற்கிடையில்,கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை வந்த ஜெர்மன் தம்பதியினர் மெரினா கடற்கரையில் நாயைத் தொலைத்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் அந்த நாயை தேடிய அவர்கள் தன்னார்வலர்களிடமும் உதவி கேட்டிருந்தனர்.மேலும், நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 30ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் விசா காலம் முடிந்ததால் அவர்கள் சென்னையில் இருந்து வருத்தத்துடன் புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் நாய் கண்டுபிடிக்கப்பட்டதாக தன்னார்வலரான விஜயா நாராயணன் மூலம் ஜெர்மன் தம்பதியினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டெஃபான் – ஜெனின் தம்பதி சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். ஜெர்மன் தம்பதியினரை பார்த்ததும் லுக் ஓடி வந்து அவர்களிடம் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தங்களின் செல்ல நாய் லூக்கை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை தாங்கள் இழந்திருந்த நிலையில் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்திருப்பதாக ஜெர்மன் தம்பதிகள் ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், லுக் எங்களை சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இனி அவனை தொலைக்க மாட்டோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும் தொலைந்து போய் 160 நாட்களுக்குப் பின் திரும்பக் கிடைத்திருப்பது அற்புதமான அனுபவம் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க