• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சென்னையில் 3 மாதங்களுக்கு முன் தொலைத்த ஜெர்மன் தம்பதியினரின் நாய் கண்டுபிடிப்பு

October 24, 2017 தண்டோரா குழு

ஜெர்மனைச் சேர்ந்த தம்பதிகளான ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் கடந்த ஆண்டு முதல் பிரத்யேக வாகனம் மூலம் உலகம் முழுவதும் சாலை மார்க்கமாகவே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

பயணத்தில் அல்பேனியாவில் அவர்களுடன் இணைந்த நாய்க்கு லுக் பெயரிட்டு தங்கள் பயணத்தில் இணைத்துக் கொண்டனர். இதற்கிடையில்,கடந்த 3 மாதங்களுக்கு முன் சென்னை வந்த ஜெர்மன் தம்பதியினர் மெரினா கடற்கரையில் நாயைத் தொலைத்தனர். சென்னையின் பல்வேறு இடங்களில் அந்த நாயை தேடிய அவர்கள் தன்னார்வலர்களிடமும் உதவி கேட்டிருந்தனர்.மேலும், நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 30ஆயிரம் ரூபாய் தருவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் விசா காலம் முடிந்ததால் அவர்கள் சென்னையில் இருந்து வருத்தத்துடன் புறப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பின் நாய் கண்டுபிடிக்கப்பட்டதாக தன்னார்வலரான விஜயா நாராயணன் மூலம் ஜெர்மன் தம்பதியினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேபாளத்தில் சுற்றுப் பயணத்தில் இருந்த ஸ்டெஃபான் – ஜெனின் தம்பதி சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். ஜெர்மன் தம்பதியினரை பார்த்ததும் லுக் ஓடி வந்து அவர்களிடம் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

தங்களின் செல்ல நாய் லூக்கை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையை தாங்கள் இழந்திருந்த நிலையில் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்திருப்பதாக ஜெர்மன் தம்பதிகள் ஸ்டெஃபான் – ஜெனின் ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், லுக் எங்களை சுற்றிச் சுற்றி வந்தான். அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். இனி அவனை தொலைக்க மாட்டோம். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றும் தொலைந்து போய் 160 நாட்களுக்குப் பின் திரும்பக் கிடைத்திருப்பது அற்புதமான அனுபவம் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க