• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேர் கைது

October 23, 2017 தண்டோரா குழு

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்து 3 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி,மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர்.எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புலட்சுமி மற்றும் இரண்டு மகள்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையில், கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கந்துவட்டிகாரர்கள் முத்துலட்சுமி அவரது கணவர் தளவாய்ராஜ், காளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க