பெங்களூர் உணவு விடுதியில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சியை வேண்டுமென்றே போட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் மற்றும் தேவராஜ்.இவர்கள் இருவரும் ஆட்டோ டிரைவர்களாக பணியாற்றி வருகின்றார். பெங்களூரில் உள்ள காமக்க்ஷிபல்யா என்னும் இடத்தில் உள்ள இந்திரா உணவகத்திற்கு வெள்ளிக்கிழமை(அக்டோபர் 19) உணவருந்த சென்றனர்.
இந்நிலையில், உணவில் கரப்பான் பூச்சி இருப்பதாகக்கூறி,மக்கள் அங்கு உணவருந்தக் கூடாது என்று கூறி ரகளை செய்தனர். உடனே அந்த உணவகத்தின் அதிகாரி காவல்நிலையத்திற்கு தகவல் தந்தார்.
தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு விசாரணை நடத்தினர். அந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்து பார்த்த போது,உணவகத்திற்குள் ஹேமந்த் கரப்பான் பூச்சியை கொண்டு வந்து, அதை உணவில் வைத்தது பதிவாகியிருந்தது.
இதநையடுத்து ஹேமந்த் மற்றும் தேவராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, விளம்பரத்திற்காக அப்படி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, ஏழை எளிய மக்களுக்காக ‘இந்திரா உணவகத்தை கர்நாடக மாநில அரசு அறிமுகப்படுத்தியது. காலை உணவு 5 ரூபாய்க்கும் மற்றும் மத்திய உணவு 1௦ ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்