• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய் அரசியலுக்கு வர அவரது தந்தை கோரிக்கை!

October 23, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்தில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்கள் பா.ஜ.க கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர்கள் அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்து வந்தனர். இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்தார். அதில், நடிகர் விஜய் காந்தியவாதி, அவர் தலைவராக உருவாகி தன்னை நம்பியவர்களுக்கு மாற்றத்தை தரவேண்டும் என்றும் “மெர்சல்” திரைப்படம் விஜய்யின் கோபத்தின் வெளிப்பாடே என்றும் கூறினார்.

இதனால், தளபதி ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார், வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க