• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரில் இருவர் உயிரிழப்பு

October 23, 2017 தண்டோரா குழு

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்புலட்சுமி மற்றும் குழந்தை மதுசரண்யா ஆகியோர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற இருவரும் பலத்த தீக்காயங்களோடு பாளையங்கோட்டை மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.அச்சன்புதூர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி, தளவாய்ராஜ் ஆகியோரிடம் விசாரணை நடைபெறகிறது.

மேலும் படிக்க