• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் பிரதமராக அபே மீண்டும் தேர்வு – பிரதமர் மோடி வாழ்த்து

October 23, 2017 தண்டோரா குழு

ஜப்பான் பிரதமராக பதவியேற்கும் ஷின்சோ அபேவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டார்.இந்நிலையில் ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 465 இடங்களில் 1200 போட்டியளர்கள் போட்டியிட்டனர்.இதில் 312 இடங்களில் ஷின்சோ அபே கட்சி வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்து ஷின்சோ அபே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,

“என் இனிய நண்பர் அபே தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். இரு நாடுகளின் உறவு மேலும் வலுப்படும் என்ற நம்பிக்கை உள்ளது”. என்று டுவிட் செய்துள்ளார்.

மேலும் படிக்க