• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

October 23, 2017 தண்டோரா குழு

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைப்பெற்றது. அப்போது, நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் 5 வயது மதிசரண்யா, ஒன்றரை வயதுள்ள அட்சய பரணியா ஆகியோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்ற அரங்கு முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டனர். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். எனினும் 2 குழந்தைகள் உட்பட நான்கு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தீரி மருத்துவமனைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.

இசக்கிமுத்து , விஜயலட்சுமி தம்பதியினர் அதே பகுதியை சேர்ந்த முத்து லட்சுமி என்பவரிடம் 1லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி வாங்கியுள்ளனர். அதற்கு பதிலாக 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளனர். எனினும் முத்துலட்சுமி கந்துவட்டி கேட்டு அவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இசக்கிமுத்து 6 தடவைக்கு மேல் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவர் குடும்பத்துடன் தீ குளித்துள்ளார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீ குளித்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க