• Download mobile app
01 Jul 2025, TuesdayEdition - 3429
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அப்போது எங்கே போனீர்கள் ராகுல் காந்திக்கு தமிழிசை பதிலடி

October 21, 2017 தண்டோரா குழு

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவற்றை விமர்சித்து வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக தலைவர்கள் அந்த காட்சியை நீக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும் திரையிலகை சேர்ந்த பலர் விஜய்க்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சலுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து, உடனே ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

அதாவது, உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டபோது எங்கே போனீர்கள் ராகுல் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை பதிவிட்டுள்ளார்.

சமீப நாட்களாக மெர்சல் பட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க