• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுநர் கைது

October 21, 2017 தண்டோரா குழு

கேரளாவில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தில், கடந்த அக்டோபர் 18ம் தேதி, பெரும்பாவூர் அரசு மருத்துவமனையில் இருந்த பச்சிளங் குழந்தையை அவசர மருத்துவ சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அதன் பெற்றோர் மற்றும் உதவி மருத்துவர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது, ஆம்புலன்ஸ் முன்பாக ஒரு சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸின் சைரன் மற்றும் வாகனத்தின் ஹோர்ன் சத்தம் கேட்ட பிறகும், அதை முன் செல்ல வழிவிடமால்,அந்த கார் சென்று கொண்டிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர், இதனை கைபேசியில் பதிவு செய்தார் அந்த சம்பவம் குறித்து காவல்துறை நிலையத்தில் புகார் அளிக்கும்போது, அந்த காணொளியை கட்டியுள்ளார். அந்த காரின் ஓட்டுநர் ஆம்புலன்ஸுக்கு வலிவிடாததால், குழந்தையை 15 நிமிடம் தாமதமானதாக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது என்று ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் நிர்மல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவருடைய உரிமம் தற்காலிகமாக ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க