• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் ஆன இந்திய இளைஞர்

October 17, 2017 தண்டோரா குழு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், ஆன்லைன் ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளியான 19 வயது அக்‌ஷய் ரூபரேலியா,தற்போது இங்கிலாந்தில் கோடீசுவரர்கள் பட்டியலில் ஒருவராக ஆகியுள்ளார். இவர் தனது பள்ளிபடிப்பை படித்திக்கொண்டே ‘ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகிறார். இதன் மூலம், ஒரு வருடத்தில் சுமார் 100கோடி மதிப்புள்ள சொத்துக்களை விற்று,சுமார் 120 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளார்.

அவருடைய இணையதளமான ‘doorsteps.co.uk’,16 மாதங்களுக்கு முன்பு தான் வெளியானது.தற்போது, இங்கிலாந்தில் உள்ள பெரிய ரியல் எஸ்டேட் கம்பெனிகள் பட்டியில் 18வது இடத்தில் உள்ளது. தனது உறவினர்களிடம் 6லட்சம் ரூபாயை கடனாக பெற்று,தனது ஆன்லைன் பிசினசை தொடங்கினார்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் அவர்,காது கேளாதஅவருடைய தாய் மற்றும் தந்தையை நன்கு கவனித்து கொள்ளும் அளவிற்கு வருமானத்தை சேர்த்துள்ளார்.

மேலும்,பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடங்களை படிக்க, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அக்க்ஷய்க்கு இடம் வழங்க முன் வந்துள்ளது. ஆனால்,தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதால், அங்கே சேர்ந்து படிப்பதை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்க்ஷய் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க