October 17, 2017
தண்டோரா குழு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அறையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்திய தலைநகர் புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் 2வது தளத்தில் உள்ள அறை எண் 242ல்,இன்று(அக்டோபர் 17) அதிகாலை சுமார் 3.35 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் 2௦ நிமிடங்கள் போராடிய பிறகு, தீயை அணைத்தனர்.
“கணினி யூபிஎஸ்சில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை”என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.