• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹேமாமாலினியின் சுயசரிதைக்கு முன்னுரை எழுதிய பிரதமர் மோடி

October 16, 2017 தண்டோரா குழு

பிரபல ஹிந்தி நடிகை ஹேமா மாலினியின் சுயசரிதைக்கு முன்னுரையை இந்திய பிரதமர் எழுதிய நிகழ்ச்சி பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

‘ஸ்டார்டஸ்ட்’ என்னும் சினிமா பத்திரிக்கையின் தயாரிப்பாளர் மற்றும் அதன் முன்னாள் ஆசிரியரான ராம்கமல் முகர்ஜி,நடிகை ஹேமா மாலினியின் ‘தி டிரீம் கேர்ள் பியாண்ட்’ என்னும் சுயசரிதையை எழுதினார்.

பிரபல இந்திய நடிகர் ஹேமா மாலினி தனது 69 வயது பிறந்த நாளை இன்று(அக்டோபர் 16ம் தேதி கொண்டாடுகிறார்.அவருடைய பிறந்த நாள் விழாவின்போது, அந்த சுயசரிதை வெளியிடப்படுகிறது. அந்த சுயசரிதையின் முன்னுரையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஹேமஜி மீது அவர் கொண்டுள்ள உணர்ச்சிகளை பற்றி பிரதமர் நரேந்திர மோடி மிக சுருக்கமாகவும்,இனிமையாகவும் எழுதியுள்ளார். ஒரு பாலிவுட் நடிகருக்கு எழுதப்பட்ட புத்தகத்தில், ஒரு பிரதமர் அதன் முன்னுரையை எழுதியிருப்பது, பத்திரிக்கை ஆசிரியராக எனக்கும் நடிகரான ஹேமாஜிக்கும் மிகவும் பெருமையாக இருக்கிறது.

“இந்திய பிரதமர் நரேந்திர மோடிஜி,எனது சுயசரிதைக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் என்பதை நான் கவுரமாக நினைக்கிறேன் “என்று ஹேமா மாலினி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க