• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை

October 14, 2017 தண்டோரா குழு

கோவையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வாசீம் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி ஜோஹரமா மற்றும் மகள் அன்ஃபியா,மகன் பர்ஹான் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.ஏற்கனவே குடும்ப பிரச்சினை நிலவி வந்த சூழலில் கடந்த 2015ம் ஆண்டு தனது மனைவி ஜோஹரமாவை வாசிம் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.இது தொடர்பான வழக்கு கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில் 14 சாட்சியங்களும் 7 வயது மகள் முக்கிய சாட்சியாகவும் விசாரிக்கப்பட்டனர்.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.அப்போது குற்றவாளி வாசீமிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி குணசேகரன் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.இதையடுத்து குற்றவாளி வாசீம் கோவை மத்கிய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க