• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார் ? அபிராமி ராமநாதன் கேள்வி

October 14, 2017 தண்டோரா குழு

தியேட்டர் கட்டணம் தொடர்பாக எங்களுக்கு கட்டளையிட நடிகர் விஷால் யார்?என, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கெட் விற்கவேண்டும், பார்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது, அம்மா குடிநீர் தான் பயன்படுத்த வேண்டும் என அண்மையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் கூறினார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்,

திரையங்கு கட்டணத்தை உயர்த்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி. தமிழக அரசு அறிவித்துள்ள கட்டண முறையில் குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் என இருப்பதால், இடத்திற்கு ஏற்ப கட்டண முறையை நெகிழ்வுத் தன்மையுடன் நிர்ணயிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம், சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்த கட்டணமும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு கூடுதல் கட்டணமும் நிர்ணயிக்க முடியும் என்றார்.

மேலும், சினிமா டிக்கெட் கட்டண விவகாரத்தில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு உத்தரவிட விஷால் யார்? எனவும் அபிராமி ராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க