• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்லியில் திருடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிப்பு

October 14, 2017 தண்டோரா குழு

டெல்லியில் திருடப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு சொந்தமான வேகன் ஆர் காரில் கடந்த வியாழக்கிழமை டெல்லி தலைமைச் செயலகம் சென்றார்.பின்னர் தனது காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் பணிகளை முடித்துக் கொண்டு அவர் வீடு செல்ல காரை எடுக்கச் சென்ற போது அவரது காரை அங்கு காணவில்லை.

அக்கம்பக்கங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தலைமை செயலகத்தில் அதிக பாதுகாப்பு இருந்தும் முதல்வரின் காரை மர்ம நபர் திருடிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து, திருடு போன கார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காசியபாத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த காரை கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் குந்தன் ஷர்மா என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க