October 13, 2017
தண்டோரா குழு
அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது திருப்பரங்குன்றம், அரவங்குறிச்சி மற்றும் தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களின் ஃபாம் பீ படிவத்தில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவர், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவின் கைரேகை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கைரேகையுடன் ஜெயலலிதா உடல்நிலை குறித்த விளக்கம் இல்லை என்று கூறினார்.
மேலும், மதுசூதனன் விளக்கம் அளிக்க பொதுச்செயலாளர் அனுமதி அளித்தாரா என்ற நீதிபதியின் கேள்விக்கு முதன்மை செயலாளர் இல்லை என பதில் அளித்தார்.இதையடுத்து, இந்த வழக்கில் ஜெயலலிதா கைரேகையை அங்கீகரித்த டாக்டர் பாலாஜி 27-ம் தேதி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.