• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல் காந்தி

October 12, 2017 தண்டோரா குழு

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, தவறுதலாக பெண்கள் கழிவறைக்கு சென்றதால் தர்மசங்கடம் அடைந்தார்.

குஜராத் மாநிலத்திலுள்ள சோட்டா உதய்பூரில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இளைஞர்களிடையே கலந்துரையாடிகொண்டிருந்தார். அதன் பிறகு, அவசரமாக கழிவறைக்கு சென்றார். ஆண்களையும் பெண்களையும் வித்தியாசப்படுத்தும் விதமாக கழிவறையில் படங்கள் இல்லை. கழிவறைக்கு வெளியே ‘மகளிர் கழிவறை’என்று குஜராத்தி மொழியில் எழுதப்பட்டு இருந்தது. ராகுல்காந்திக்கு குஜராத்தி மொழி தெரியாததால், அவர் தவறுதலாக உள்ளே நுழைந்தார்.

அவர் தவறுதலாக மகளிர் கழிவறைக்கு சென்றதை கவனித்த அவருடைய காவலர்கள்,உடனே அவரை வெளியே அழைத்து வந்தனர். அவருக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது.கழிவறைக்கு வெளியே எழும்பிய குழப்பல் சத்தம் கேட்டு, அங்கு வந்தவர்களை ராகுல்காந்தியின் பாதுகாவலர்கள் அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

தவறுதலாக மகளிர் கழிவறைக்குள் சென்றுவிட்டு, வெளியே வந்தராகுல் காந்தியை பார்த்த மக்கள் சிரித்தனர். அந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்கள் கைபேசியில் பதிவு செய்தனர்.

மேலும் படிக்க