• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்-தேர்தல் ஆணையம்

October 12, 2017 தண்டோரா குழு

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த புகாரின் பேரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி தெரிவித்துள்ளார்.மேலும்,குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை பதவிக்காலம் 2018 ஜனவரியோடு முடிகிறது.குஜராத் மாநிலத்தில் 182 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும், இமாச்சல் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனையடுத்து குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க