• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுரையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி

October 12, 2017 தண்டோரா குழு

மதுரையில் அக்டோபர் 22ஆம் தேதி RSS ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி அளித்தது.

மதுரையை சேர்ந்த கிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,”விஜயதசமி மற்றும் RSS அமைப்பு தினத்தை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை மதுரை ஆர்.ஆர்.மண்டபத்திலிருந்து, அண்ணாநகர் சுகுணா ஸ்டோர்ஸ் வரை பேண்ட் இசை வாத்தியத்துடன், ஊர்வலமாக செல்லவும், பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்திருந்தோம். அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் இதற்கான அனுமதியை மறுத்து உத்தரவிட்டுள்ளார். எனவே அமைதியான முறையில் நடைபெறும் கூட்டத்தித்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி சுந்தர் முன்பாக அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.அப்போது காவல்துறை தரப்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியிருக்கும் பகுதியில் அதிக மருத்துவமனைகள் உள்ளன. பேண்ட் வாத்தியத்துடன் செல்வதால் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவர். மேலும் இதற்கு முன்பாக ஆர் எஸ் எஸ் தரப்பில் பேரணி நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெறும் நிலையில் தற்போது எவ்வித அனுமதியும் பெறவில்லை. ஆகவே அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆர் எஸ் எஸ் அமைப்பினர், மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி முடிவெடுக்கவும், அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், அக்டோபர் 22ம் தேதி மதுரை புறவழி சாலையிலிருந்து பழங்காநத்தம் வரை ஊர்வலம் நடத்தலாம் என்றும் ஊர்வலத்தில் லத்தி, கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க