• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து தமக்கு தகவளித்த கைதிகள்அடித்து துன்புறுத்தப்படுகின்றனர்

October 11, 2017 தண்டோரா குழு

பெங்களூர் சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்துத் தமக்குத் தகவல் அளித்த கைதிகள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக கர்நாடகக் காவல்துறைத் துணைத் தலைவர் ரூபா கூறியுள்ளார்.

பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா சசிகலாவிற்கு சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக கூறி ஆதாரங்களை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபா,

பெங்களூர் சிறைக்குத் தாம் சென்றபோது சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எண்ணற்ற கைதிகள் தம்மிடம் குறைகூறியதாகவும், 32பேர் அழுத்தமாகத் தங்கள் கருத்துக்களைக் கூறியதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அவ்வாறு தெரிவித்த கைதிகள் மாநிலத்தின் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும்,இது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக விசாரணை நடத்துவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

மேலும், சிறையில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்களுக்குத் தக்க தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் ரூபா கூறியுள்ளார்.

மேலும் படிக்க