• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலைஉயர்வு

October 11, 2017 தண்டோரா குழு

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டாஸ்மாக் வருமானத்தை அதிகரிக்க பீர், பிராந்திகளின் விலையை உயர்த்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு விலையை ரூ.12 வரை உயர்த்தவும் பீர் விலையை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 20 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏழாவது ஊதியக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை அதிகரிக்கும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.

மேலும் படிக்க