• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரயில் நிலையத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

October 10, 2017 தண்டோரா குழு

சென்னையில் மின்சார ரயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணித்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புறநகர் பகுதியில் இருந்து, சென்னையில் உள்ள கல்லுாரிக்கு படிக்க வரும் மாணவர்கள், ரயில் தினம் கொண்டாடுவதாக கூறி, அவ்வபோது அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தரையில் தேய்த்தபடி சென்றனர்.

மேலும், ‘ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்’ என, பரபரப்பை ஏற்படுத்தி, ரயில் பயணியரை எரிச்சலடையச் செய்து உள்ளனர். இதை, தங்களுடன் படிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு காட்டுவதற்காக, வீடியோ பதிவு செய்த அவர்கள், சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை பார்த்த, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள், கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ காட்சிகள், யாரால் வெளியிடப்பட்டுள்ளது என, வலைதளங்களில் ஆராய்ந்ததில், பாரதிராஜா என்ற மாணவரின், ‘பேஸ்புக்’கில், 7ம் தேதி பதிவேற்றப்பட்டது தெரியவந்தது.மூன்று வீடியோக்களை பதிவேற்றியுள்ள அவர், ‘இது தான் நாங்க, இப்படித்தான் நாங்க’ என்ற தலைப்பில், பதிவு செய்திருந்தார்.

இது குறித்த போலீசார் விசாரித்து வந்த போலீசார், ஜெகதீசன்(18), தண்டபாணி(20), கிருஷ்ணன்(18), யுவராஜ்(18), ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க