• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சிம்லாவில் களைக்கட்டிய பாரம்பரிய ஆட்டுச்சண்டை.

June 16, 2016 வெங்கி சதீஷ்

ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லா அருகே உள்ள தர்களி கிராமத்தில் தற்போது பாரம்பரிய திருவிழாவான ராமர் சண்டை எனப்படும் நரட்டி விழா நடைபெற்று வருகிறது.

இந்தவிழா அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மலை மீது உள்ள லட்சுமி நாராயணாவை தரிசித்து ஆசிபெறுவதற்கான விழாவாக பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். சிம்லாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் மலையடிவாரத்தில் ஒன்றுகூடி அங்கிருந்து மலைப் பயணத்தைத் தொடர்வார்கள்.

அப்போது அவர்களது பாரம்பரியத் தொழிலான ஆடுவளர்ப்பை மேம்படுத்தும் விதமாக அங்குள்ள மந்தைகளில் தங்களிடம் உள்ள வலிமையான ஆட்டை அழைத்து வந்து மற்றவர்கள் கொண்டுவரும் ஆடுகளுடன் சண்டைக்கு விடுவார்கள்.

இதில் வெற்றிபெறும் ஆட்டிற்குப் பரிசுகளும் வழங்கப்படும். இவ்வாறு செய்வதன்மூலம் தங்களது மலைப்பயணம் இனிமையாக அமையும் எனவும், கடவுளின் ஆசிவாதம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து கூறிய அப்பகுதியைச் சேர்ந்த கலா குமாரி, இந்த ஆட்டுச்சண்டை பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குழந்தைகளும் விரும்பிப் பார்ப்போம். இது திருவிழாவின் ஒரு பகுதி எனத் தெரிவித்தார்.

இது குறித்து இந்தப் போட்டிகளை முன்னின்று நடத்தும் சேட்டன் பக்ல என்பவர் கூறும்போது, இங்கு ஆடு வளர்ப்பு தான் பிரதானத் தொழில் அதனால் அவரவர்கள் திறமைக்கு ஏற்ப ஆடுகளை வளர்கின்றனர். எனவே காலம் காலமாக இங்கு ஆட்டுச்சண்டை நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் அதிக வீரியம் கொண்ட ஆண் ஆடுகளை இனம்கண்டு பின்னர் இன விருத்திக்குப் பயன்படுத்துவர். இதனால் நல்ல தரமான ஆடுகள் கிடைப்பதுடன் மக்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

பழைய சடங்குகள் அனைத்தும் தடை செய்யவேண்டும் என ஒரு சிலர் கூறிவரும் நிலையில் பழைய சடங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு காரணத்திற்கு தான் எனப் புரிய வைக்கின்றனர் இந்த மலைவாழ் மக்கள்.

மேலும் படிக்க