• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தின் மீது ஏறி எலக்ட்ரீசியன் தற்கொலை மிரட்டல்

October 9, 2017 தண்டோரா குழு

15 நாட்கள் விடுப்பு கொடுக்க முடியாது என கூறியதால் காருண்யா பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தின் மீது ஏறி அந்த பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரீசியன் ஆசாத் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கோவை சிறுவாணி அருகே காருண்யா நிகர்நிலைப்பல்கலைககழகம் செயல்பட்டு வருகிறது.இதில் பொறியியல் மற்றும் மேலாண்மை பாடப்பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால்,அடிப்படை தொழிலாளர்கள் 300 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காருண்யா பல்கலைக்கழகத்தில் 7 ஆண்டுகளாக எலெக்ட்ரிசியனாக கேரளாவைச்சேர்ந்த ஆசாத் பணிபுரிந்து வருகிறார். அவர் விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதால் 15 நாட்கள் ஊருக்கு செல்ல வேண்டும் என பொறியாளரிடம் தெரிவித்துள்ளார். 15நாட்கள் விடுப்பு கொடுக்க முடியாது என அவர் கூறியதால் மனமுடைந்த ஆசாத் ஆடிட்டோரியம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் காருண்யா பல்கலைகழகத்தில் பணிபுரியும் ஒட்டுனர், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆப்ரேட்டர்கள் , எலக்ட்ரிசியன், வர்ணம் பூசுபவர்கள் ஆகிய துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எட்டுமணி நேர வேலை மட்டுமே வழங்க வேண்டும் எனவும், அதிக நேரம் வேலை வாங்கினால் அதற்கான சம்பளத்தை தனியாக தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதே போல் வாரம் தோறும் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் சம்பளத்தோடு கூடிய விடுப்பு, தேசிய விடுமுறை நாட்களிலும் இதே போல வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரண்டு வருடங்களாக சம்பள உயர்வு வழங்காமல் இருப்பதால்,இரண்டு வருடத்திற்கான ஊதிய உயர்வை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி ஆசாத் சார்ந்திருக்கும் பொது தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்ததையடுத்து அவர் கீழே இறங்கினார்.

மேலும் படிக்க