• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்ரா ரயில் எரிப்பு- 11 பேரின் தண்டனை குறைப்பு

October 9, 2017 தண்டோரா குழு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி விரைவு ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் வைத்து மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. குற்றவாளிகளில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.

இதற்கிடையில், குற்றவாளிகள் சார்பிலும், விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க