• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை – விஜயகாந்த்

October 7, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தின் புதிய ஆளுநரனா பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் கூறுகையில்,

“நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன்.தமிழகத்தில் நிலவும் டெங்கு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அதற்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும்,உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அழைப்பு விடுக்கப்படாததால் சிவாஜி கணேசனின் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.திரையில் ரஜினி, கமல் நடிப்பது போல் ஈபிஎஸ்- ஓபிஎஸ் சேர்ந்து நன்றாக நடிக்கின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் படிக்க