• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐகான் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

October 6, 2017

அணு ஆயுதங்களை ஒழிக்கும் அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம், வேதியியல் ஆகிய பிரிவுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது.

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் நிகழ்ச்சி நார்வே நாட்டில் நடந்தது. அதில்,அணு ஆயுதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டஐகேன்’ (ICAN -International Campaign to Abolish Nuclear Weapons)அமைப்பு தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடி வருகிறது.தற்போது ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது.

மேலும் படிக்க