• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார்

October 6, 2017 தண்டோரா குழு

உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை சந்திக்க சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதனால், சசிகலா பரோலில் வெளிவந்து மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோல் கேட்டிருந்தார்.

இதையடுத்து சசிகலாவிற்கு 18 நிபந்தனைகளை விதித்து கர்நாடக காவல்துறை 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.இதைத்தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து 233 நாட்களுக்கு பிறகு சசிகலா வெளியே வந்துள்ளார்.

பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று இரவு விமானம் மூலம் சசிகலா சென்னைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார். சென்னைக்கு வரும் சசிகலா தியாகராய நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க