• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல்

October 6, 2017 தண்டோரா குழு

சசிகலாவிற்கு 5 நாள் பரோல் வழங்கி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் சசிகலா கணவர் நடராஜனுக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலழிந்துவிட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு, இரு தினங்களுக்கு முன், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.அவரை பார்க்க 15 நாள் பரோல் கேட்டு கர்நாடக சிறை நிர்வாகத்திடம் சசிகலா விண்ணப்பித்தார்.அவரது விண்ணப்பம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.அப்போது, விண்ணப்பத்தில் சில ஆவணங்கள் இணைக்கப்படாததால் பரோல் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, புதிய மனுவை உரிய ஆவணங்களுடன் சசிகலா நேற்று தாக்கல் செய்தார்.சசிகலாவை பரோலில் அனுப்புவது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை தமிழக காவல்துறையிடம் கேட்டது.தமிழக காவல் துறை சார்பில் ஆட்சேபனையில்லை என, தெரிவிக்கப்பட்டதுடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க