• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது – புதிய ஆளுநர்

October 6, 2017 தண்டோரா குழு

அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவி ஏற்றப்பின் பேசிய பன்வாரிலால் புரோகித்,

தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். நிர்வாகத்தின் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்படுவேன்.அரசியல் சட்டத்தை காப்பது எனது கடமை. அரசியல் ரீதியாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாது. அரசின் செயல்பாடுகளை பொறுத்து எனது ஆதரவு இருக்கும் என்றார்.

புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க