• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு மோடி குற்றாவாளி அல்ல – குஜராத் உயர்நீதிமன்றம்

October 5, 2017 தண்டோரா குழு

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தில் கடந்த 2002-ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்புக்கு பிறகு குஜராத்தில் நடந்த மதக் கலவரங்களில் முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி 68 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மோடி உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என அறிக்கை அளித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

இதைத்தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஸாக்கிய ஜாப்ரி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா செட்டால்வத் ஆகியோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில், இந்த மேல்முறையீட்டை குஜராத் உயர்நீதிமன்றம்நிராகரித்துள்ளது.

மேலும் படிக்க