• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரனின் மனு தள்ளுபடி

October 5, 2017 தண்டோரா குழு

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தினகரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், மேலும், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இதுதொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் அளிக்கக் கோரியும்,
இரட்டை இலை விவகாரத்தில் முடிவு எடுக்க, 2018 பிப்.,28 வரை தேர்தல் ஆணையத்துக்கு காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தினகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் படிக்க