• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரனின் மனு தள்ளுபடி

October 5, 2017 தண்டோரா குழு

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தினகரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், மேலும், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இதுதொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம் அளிக்கக் கோரியும்,
இரட்டை இலை விவகாரத்தில் முடிவு எடுக்க, 2018 பிப்.,28 வரை தேர்தல் ஆணையத்துக்கு காலநீட்டிப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என்று தினகரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் படிக்க