• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகம் வந்தார் புதிய ஆளுநர்

October 5, 2017 தண்டோரா குழு

தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வந்தார்.

தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் இன்று சென்னை வந்தார்.அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

தமிழக ஆளுநராக பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது.இதனையடுத்து மஹாராஷ்டிர மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இதையடுத்து புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 30ம் தேதி உத்தரவிட்டார்.

கிண்டி ராஜ்பவனில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் விழாவில், அவர் தமிழக ஆளுநராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேலும் படிக்க