• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறையில் காட்டு யானை தாக்குதலால் பொது மக்கள் அச்சம்

October 4, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வால்பாறை சங்கிலி ரோடு பகுதியில் தொடரும் காட்டு யானை தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சங்கிலி ரோடு பகுதியில் அடிக்கடி காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில்,தற்போது காட்டுயானை சங்கிலி ரோடு பிரிவில் உள்ள பள்ளிக்கூட சுற்றுச்சுவற்றை இடித்து சேதபடுத்தியது. பின்பு அருகில் உள்ள ரேசன் கடையை சேதப்படுத்தியது.

பொதுமக்கள் விரட்டியதால் அங்கிருந்து நல்லமுடி 2வது டிவிசனுக்கு சென்று அங்குள்ள விநாயகர் கோவில் கதவை உடைத்தது பின்பு அருகில் உள்ள டீக்கடையை சேதப்படுத்தியது. இதைதொடர்ந்து அங்கிருந்து நல்லமுடி 3வது டிவிசனுக்கு சென்ற யானை அங்கு ஆதிமுருகன் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது.எனினும் அருகில் வனத்துறை அலுவலகம் இருந்தும் வனஊழியர்கள் ஒருவரும் யாணையை விரட்ட வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் தொடர்ந்து யானை நடமாட்டம் உள்ளதால் நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க