• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் கல்வி உதவி தொகை பெற காலக்கெடு நீட்டிப்பு

October 4, 2017 தண்டோரா குழு

தமிழ்நாடு விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள கிறித்துவர்,இஸ்லாமியர்,சீக்கியர்,புத்த மதத்தினர்,பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைனில் கல்வி உதவி தொகை பெற புதிதாக விண்ணபிக்க மற்றும் புதுப்பிக்கவும் காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2017-18 கல்வியாண்டில் அரசு உதவி பெறும் மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், 11 ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்/ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் , மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்வர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இனையதளம் மூலமாக புதுப்பிக்கவும்,புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கும் 30.10.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்றிருந்த நிலையில் 31.10.2017 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க