• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலாவுக்கு பரோல் வழங்க கர்நாடகா சிறைத்துறை மறுப்பு

October 3, 2017 தண்டோரா குழு

சசிகலாவுக்கு பரோல் வழங்க பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறைத்துறையில் இருக்கும் சசிகலா, கவலைக்கிடமாக உள்ள தன் கணவரை சந்திப்பதற்காக 15 நாட்கள் பரோலில் விடுவிக்க வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதனால் கணவரை பார்க்கச் செல்ல சசிகலாவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், பரோல் பெறுவதற்கு சசிகலா தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்கள் முறையாக இல்லாததால் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பரோல் கேட்டு கூடுதல் ஆவணங்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சிறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூர் சான்று அதிகாரியின் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை இணைக்கவில்லை என்று சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க